பெரும்பாலான தலைவர்கள் ராஜபக்சவுக்கு ஆதரவு... சிறிசேன பேட்டியால் அமைச்சர்கள் பதவி விலக முடிவு...
கொழும்பு : பெரும்பாலான தலைவர்கள் ஆதரவால் தான் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்று சிறிசேன அளித்த பேட்டியால் ஆத்திரமடைந்த சில அமைச்சர்கள் பதவி விலக முடிவெடுத்துள்ளனர்.
இலங்கையில் வருகிற ஆகஸ்டு 17-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் உள்ள இலங்கை சுதந்திரா கட்சியின் வேட்பாளராக ராஜபக்சே போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி மற்றும் இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவராக அதிபர் மைத்ரி பால சிறிசேனா உள்ளார். ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முதலில் சிறிசேனா அனுமதித்ததாக தகவல் வெளியாகியது.
ஆனால் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சிறிசேனா, ராஜபக்சே பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்றும், பெரும்பாலான தலைவர்கள் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்ததால் தன்னால் எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
சிறிசேனாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசில் இருந்து 3 துணை அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துணையமைச்சர் சுதர்சனி பெர்னாடோபுல்லே , ஊரக பொருளாதார விவகாரங்கள் துறை துணையமைச்சர் லசந்தா அலகியவன்னா, மற்றும், துறைமுகங்கள் கப்பல் துறை துணையமைச்சர் எரிக் பிரசன்ன வீரவர்தனே ஆகியோர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதிபர் சிறிசேனாவின் கருத்து தங்களை மிகவும் காயப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசில் இருந்து மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்வதால் இவ்விவகாரத்தில் சிறிசேனாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications