இலங்கை வட க்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக ஊழல் அமைச்சர்கள் போர்க்கொடி
இலங்கை வடக்கு மாகாண சபையில் ஊழல் செய்த அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய முதல்வர் விக்னேஷ்வரன் உத்தரவிட்டதால், அவருக்கு எதிராக ஆளுனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு : இலங்கை வடக்கு மாகாண சபையின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றும் கோரிக்கைக் கடிதம், ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில், கடந்த வாரம் மீன்பிடி போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை அமைச்சர்கள் உட்பட 4 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. இதுகுறித்த அறிக்கை மீதான விவாதம் ஜூன்14ம் தேதி நடைபெற்றது. அப்போது பேசிய வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அமைச்சர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, நடைமுறை மாற்றம் ஒன்றை வடமாகாண சபை உறுப்பினர்களும் மக்களும் விரும்புவதாக தெரிவித்தார்.

எனவே அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் தாமாகவே முன்வந்து, தமது பதவிகளை இன்றுக்குள் ராஜினாமா செய்யுமாறும் அவர்கேட்டுக்கொண்டார். மேலும் மற்ற அமைச்சர்கள் இரண்டு பேரும் விசாரணை முடியும் வரை ஒரு மாதம் விடுப்பில் சென்றுவிடுமாறும் விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.
இந்நிலையில் முதல்வர் விக்னேஷ்வரனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அமைச்சர்கள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் கடிதம் அளித்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட வடக்கு மாகாண ஆளுநர், சட்டத் திருத்திற்கு உட்பட்டு இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, பிரிவினை வாதத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு வரும் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, முன்னாள் அதிபர் ராஜபக்ஷே வலியுறுத்தியுள்ள நிலையில், அமைச்சர்கள் ராஜினாமா விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications