ரெண்டு குழந்தைங்க இருக்கே.. என்ன பண்ணுவேன்? உடைந்து அழுத ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மனைவி.. கலக்கமான பின்னணி
சிட்னி: மறைந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குறித்து அவரின் மனைவி லாரா தனது கணவர் குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார்.
நேற்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பலியானார். டவுன்ஸ்வில் என்ற நகரத்தில் காரில் செல்லும் போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கினார்.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் ஆஸ்திரேலியாவின் ஹெர்வி ரேஞ்ச் ரோடு பகுதியில் செல்லும் போது விபத்துக்கு உள்ளானது. இவரின் கார் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பல முறை உருண்டு, புரண்டு விபத்துக்கு உள்ளானது. உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு 46 வயதே ஆவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
இந்த நிலையில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மனைவி லாரா தனது கணவர் குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார். கிரிக்கெட் டைம்ஸ் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் குழந்தைகளை இனி எப்படி பார்த்துக்கொள்வது என்றுதான் எனக்கு தெரியவில்லை. என் குழந்தைகள் மீது அவர் மிகவும் அன்பாக இருந்தார். சிறந்த தகப்பனாக இருந்தார்.

பெரிய ஆள்
அவர் பெரிய ஆளாக இருந்தாலும், அனைவருக்கும் நேரம் ஒதுக்கினார். அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. எங்களின் இரண்டு குழந்தைகளும் என்ன செய்ய போகிறது என்பதை நினைத்தாலே பதட்டமாக இருக்கிறது. அவர் எதை நினைத்தும் கவலைப்பட்டது இல்லை.

நல்லவர்
அவர் அனைத்தையும் ஈசியாக எடுத்துக்கொள்ள கூடியவர். அவருக்கு சரியாக போன் பயன்படுத்த தெரியாது. பழைய ஆட்கள் போல, அமர்ந்து அருகில் இருப்பவரிடம் பேசுவார். அவர் தான் கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை என்று கவலை இருந்தது. சரியான கல்வி தனக்கு கிடைக்கவில்லை என்று கவலை இருந்தது. அது மட்டுமே அவருக்கு கவலையாக இருந்தது. இருந்தாலும் அவர் மிகவும் புத்திசாலியான நபராக இருந்தார்.

உருக்கம்
தன்னை பற்றியும், தன்னுடைய திறமைகள் பற்றியும் அவர் அதிகம் கவனிக்க கூடியவர். அவர் நன்றாக பேச கூடியவர். நன்றாக பழக கூடியவர். அவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பார்க்க கூடியவர் அல்ல. எல்லோரிடமும் நட்பாக பழகினார். அவரின் மறைவு பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. எங்களை அவரின் மரணம் உடைத்து போட்டுள்ளது என்று மிகவும் உருக்கமாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மனைவி லாரா குறிப்பிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications