பிளாஸ்டிக்கை ஒழிக்க போராடிய இளைஞர் தற்கொலை… 127 கோடி மக்களுக்காக சாகிறேன்… வீடியோ பதிவில் உருக்கம்
தஞ்சை: தமிழகத்தில் இருந்து பிளாஸ்டிக்கை ஒழிக்க போராடிய ஜவகர் என்ற இளைஞர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த குமரன் மகன் ஜவகர். 20 வயதான இவர், பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று தனி நபராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு சாலையில் அமர்ந்தும் செல்போன் டவரில் ஏறியும் பிளாஸ்டிக்கை ஒழிக்க போராட்டம் நடத்தினார். ஆனால் அரசு ஒன்றும் கண்டு கொள்வதாக இல்லை. பிளாஸ்டிக் ஆபத்தானது என்று வாய்மொழியாக மட்டுமே அரசு சொல்லி வருகிறதே தவிர, தீவிரமான முயற்சிகளை பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக எடுக்கவில்லை என்று ஜவகர் கருதியுள்ளார். இதனால் மனம் உடைந்து போன அவர், கடந்த 10ம் தேதி ஒரு வீடியோவில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறியதோடு, பிளாஸ்டிக் ஒழிப்பிற்காகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் உருக்கமாக பேசியுள்ளார்,
"127 கோடி மக்கள் நன்றாக வாழ பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் யானை பசிக்கு சோளப்பொறி போல நடந்து கொள்கிறது. சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டும். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று வீடியோ பதிவை வெளியிட்டு விட்டு, புது ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்துள்ளார் ஜவகர். அவரது உடல் கண்டிதம்பட்டு பொட்டவாச்சாவடி அருகே கரை ஒதுங்கியுள்ளது. 20வயது இளைஞனின் தற்கொலையால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications