For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக்காதலனை அடித்து உதைத்த தந்தை.. வீட்டு சிறையில் வைக்கப்பட்ட அபிராமி.. திடுக் தகவல்கள்!

கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவரவே சுந்தரத்தை அபிராமியின் தந்தை அடித்து உதைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியின் அதிரடி வாக்கு மூலம்

    சென்னை: கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவரவே சுந்தரத்தை அபிராமியின் தந்தை அடித்து உதைத்துள்ளார்.

    பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமியின் கள்ளக்காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தைகளை கொன்றுவிட்டு கேரளா தப்பிசென்ற அபிராமியை அவரது கள்ளக்காதலனை வைத்தே நாகர்கோவிலில் கைது செய்தனர் போலீசார்.

    2 மாதங்களுக்கு முன்பு

    2 மாதங்களுக்கு முன்பு

    இந்நிலையில் அபிராமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெருக்கம் ஏற்பட்டது.

    படுக்கை வரை

    படுக்கை வரை

    இரண்டு மாத நெருக்கம் படுக்கை வரை சென்றுள்ளது. அபிராமியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சுந்தரம் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது.

    சுந்தரத்துக்கு அடி உதை

    சுந்தரத்துக்கு அடி உதை

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் இரண்டு வீட்டாருக்கும் தெரியவந்ததால், அபிராமியின் தந்தை, சுந்தரத்தை அடித்து உதைத்துள்ளார். தனது மகளுடனான பழக்கத்தை கைவிடும்படி எச்சரித்துள்ளார்.

    வீட்டுச்சிறை

    வீட்டுச்சிறை

    பின்னர் மருமகனின் வீட்டிற்கு சென்ற அவரது தந்தை மகள் அபிராமிக்கு அறிவுரை அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து குடும்ப கவுரவத்தை காப்பாற்ற மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைக்கும்படி மருமகனிடம் கூறியுள்ளார் அபிராமியின் தந்தை.

    காதில் வாங்காத அபிராமி

    காதில் வாங்காத அபிராமி

    ஆனால் கள்ளக்காதல் மயக்கத்தில் இருந்த அபிராமி கணவர் கூறுவதையோ தந்தை கூறுவதையோ காதில் போட்டுக்கொள்ளாமல் சுந்தரத்துடன் வாழ வேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளார்.

    குழந்தைகள் கொலை

    குழந்தைகள் கொலை

    இதைத்தொடர்ந்து தான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக கள்ளக்காதலன் சுந்தரத்திடம் அபிராமி கூறினார். இதனால் சுந்தரத்தின் ஆலோசனைப்படி கடந்த 30ம் தேதி இரவு இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்தும், மூச்சை நிறுத்தியும் கொலை செய்தார்.

    கைது செய்த போலீஸ்

    கைது செய்த போலீஸ்

    கணவரை கொலை செய்ய காத்திருந்தும், அது முடியாமல் போனதால் அங்கிருந்து தப்பினார். திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த அவரை கள்ளக்காதலன் மூலம் நாகர்கோவில் வரவழைத்து போலீசார் கைது செய்தனர்.

    பாழாய் போன குடும்பம்

    பாழாய் போன குடும்பம்

    8 வருட காதல் திருமண வாழ்க்கையில் புயலாக வீசிய கள்ளக்காதலால் ஒரு குடும்பமே பாழாகி போயிருப்பது பெரும் வேதனையை எற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளை கொன்று கணவரையும் கொல்ல காத்திருந்த அபிராமிக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Abirami father beaten her illicit lover Sundaram after knowing her illicit love. Her family made her house arrest also.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X