அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடக்குமா?.... தினகரன் ஆதரவாளர்கள் வழக்கு இன்று விசாரணை - வீடியோ
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ தொடர்ந்துள்ள வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அதிமுக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட உள்ளார். இதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முன்கூட்டியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலாவையும் துணைப் பொதுச் செயலாளர் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், பொதுக்குழுவில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களையும் நிர்வாகிகளையும் அந்தந்த ஊர் அமைச்சர்கள் தங்கள் பொறுப்பில் அழைத்து வர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மைசூரில் மிக ரகசியமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம், ஶ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டக் கூடாது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications