அதிமுக அரசு திருந்த வேண்டும்.. இல்லையென்றால் திருந்த வைப்பேன்.. டிராபிக் ராமசாமி அதிரடி!
அதிமுக அரசு திருந்த வேண்டும் இல்லையென்றால் திருந்த வைப்பேன் என்று டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: அதிமுக அரசு திருந்த வேண்டும் இல்லையென்றால் திருந்த வைப்பேன் என்று டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் விதிமுறைகளை மீறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக வைத்த அனைத்து பேனர்களையும் நீக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் மிகவும் பிரமாண்டமாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடக்க உள்ளது. தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் இந்த விழா நடைபெறும். இதற்காக வைக்கப்பட்ட பேனர்கள்தான் தற்போது அகற்றப்பட உள்ளது.
[எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: படையெடுத்த அதிமுகவினர்.. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ]
மேலும் இதுகுறித்து அறிக்கை அளிக்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு தொடுத்த டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து உள்ளார்.
அதிமுக பேனர்களை அகற்றிவிட்டதாக ஹைகோர்ட்டில் கூறியது முழுக்க முழுக்க பொய். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் அது. நான் இன்று கூட பார்த்தேன். 8 மணிக்கு கூட பார்த்தேன். 700 பேனர் வரை இருக்கிறது.
காவல் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். இதை அவர்கள் தட்டி கேட்கவில்லை. அதனால்தான் நீதிமன்றம் தற்போது தலையிட்டு முடிவெடுத்து இருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனை.
பல முறை சொல்லிவிட்டேன். இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். இந்த கொள்ளைக்கார கூட்டத்திற்கு இது பெரிய பாடம். அவர்கள் எல்லாம் திருந்தினால் நல்லது, இல்லை என்றால் இந்த வழக்கு மூலமே அவர்களை திருந்த வைப்பேன் என்று கூறியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications