மருத்துவர் கனவுக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா விண்ணுலகம் சென்ற நாள் இன்று...
சென்னை: மருத்துவராகும் கனவுடன் உச்சநீதிமன்றம் வரை நீட்டுக்காக போராடிய அரியலூர் அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு முதல்முறையாக நடத்தப்பட்டது. இந்த தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று அரசு தெரிவித்தும் அதை மத்திய அரசு கேட்டுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு மன்றாடியும் பயனில்லை.

மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு
தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்த போது கூறிருந்தார். இதையடுத்து தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

உச்சநீதிமன்றம்
இதனிடையே அரசின் தீர்மானத்தை எதிர்த்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். அப்போது பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற அரியலூர் மாணவி அனிதாவும் நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு சென்றார்.

பேரிடி
இதையடுத்து நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மருத்துவர் கனவுடன் இருந்த அனிதாவின் தலையில் பேரிடியை இறக்கியது.

முதலாம் ஆண்டு
இதையடுத்து அவர் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. நீட் எனும் அரக்கன் உருவாகாமல் இருந்திருந்தால் அந்த மாணவி இன்று தனது மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு முடித்திருப்பார். ஆனால் இன்றோ அவருக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications