அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கிறார் முதல்வர் - போராட்டக்குழு
அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து போராட்டக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவார் என்று நம்புவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து போராட்டக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று தலைமைச் செயலகத்தில் அவினாசி அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் சந்தித்து பேசினார். அப்போது இந்த திட்டத்தை நிறைவேற்றுதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வெள்ளியங்கிரி, அத்திக்கடவு திட்டத்தின் அவசியத்தை முதல்வரிடம் விளக்கியதாக கூறினார்.

3 மாவட்டங்கள்
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக கூறினார். அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று முதல்வரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் உறுதி
கடந்த 60 ஆண்டுகளாக அத்திக்கடவு திட்டத்துக்காக போராடி வருவதாக கூறிய போராட்டக்குழுவினர் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கியத்துவத்தை முதல்வர் உணர்ந்துள்ளதாகவும், அந்த திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து விட்டு திட்டத்தை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்ததாகவும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
60 ஆண்டு கால கனவு
அத்திக்கடவு - அவினாசி திட்டம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டம். இதை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கொங்கு மண்டல மக்களிடையே எழுந்துள்ளது. எனவேதான் அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை முதல்வர் செயல்படுத்துவார் என்று போராட்டக்குழுவினர் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications