அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கிறார் முதல்வர் - போராட்டக்குழு
அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து போராட்டக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவார் என்று நம்புவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து போராட்டக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று தலைமைச் செயலகத்தில் அவினாசி அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் சந்தித்து பேசினார். அப்போது இந்த திட்டத்தை நிறைவேற்றுதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வெள்ளியங்கிரி, அத்திக்கடவு திட்டத்தின் அவசியத்தை முதல்வரிடம் விளக்கியதாக கூறினார்.

3 மாவட்டங்கள்
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக கூறினார். அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் 3 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று முதல்வரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் உறுதி
கடந்த 60 ஆண்டுகளாக அத்திக்கடவு திட்டத்துக்காக போராடி வருவதாக கூறிய போராட்டக்குழுவினர் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கியத்துவத்தை முதல்வர் உணர்ந்துள்ளதாகவும், அந்த திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து விட்டு திட்டத்தை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்ததாகவும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
60 ஆண்டு கால கனவு
அத்திக்கடவு - அவினாசி திட்டம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டம். இதை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கொங்கு மண்டல மக்களிடையே எழுந்துள்ளது. எனவேதான் அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை முதல்வர் செயல்படுத்துவார் என்று போராட்டக்குழுவினர் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications