மண்டைய உடைச்சிட்டு கேஸ் போடுவாங்க.. போயஸ்கார்டனில் அடிவாங்கிய செய்தியாளர் மீது வழக்குப் பதிவு
போயஸ் கார்டனில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் சஞ்சீவி நேற்று தாக்கப்பட்டார். மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ள அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று சென்றார். அப்போது அவருடன் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கடுமையாக தாக்கப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் போயஸ் தோட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். இதன் பிறகு அந்த வீட்டில் யாரும் வசிக்காமல் இருந்தனர்.

செய்தியாளர்களுடன் தீபா
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்திற்கு நேற்று சென்றார். அப்போது தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் சஞ்சீவி மற்றும் ஒளிப்பதிவாளர் ராகவன் ஆகியோரையும் தீபா அழைத்துச் சென்றார்.

மண்டை உடைப்பு
போயஸ் கார்டன் வீட்டிற்குள் நுழைந்த உடன் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை அங்கிருந்த கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியது. இதில் செய்தியாளரின் மண்டை உடைந்தது ரத்தம் கொட்டியது.

செய்தியாளர் மீது வழக்கு
இந்நிலையில் அடிவாங்கி படுகாயம் அடைந்த செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் மீது குற்றச்சாட்டு
தீபாவுடன் சென்ற செய்தியாளரின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ள நிலையில் அவர் மீதே வழக்கு தொடர்ந்திருப்பது செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாருக்கு போயஸ்கார்டனில் என்ன நடந்தது என்று தெரிந்த நிலையிலும் ஒருதலைபட்சமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications