மண்டைய உடைச்சிட்டு கேஸ் போடுவாங்க.. போயஸ்கார்டனில் அடிவாங்கிய செய்தியாளர் மீது வழக்குப் பதிவு
போயஸ் கார்டனில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் சஞ்சீவி நேற்று தாக்கப்பட்டார். மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ள அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று சென்றார். அப்போது அவருடன் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கடுமையாக தாக்கப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் போயஸ் தோட்டத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். இதன் பிறகு அந்த வீட்டில் யாரும் வசிக்காமல் இருந்தனர்.

செய்தியாளர்களுடன் தீபா
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்திற்கு நேற்று சென்றார். அப்போது தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் சஞ்சீவி மற்றும் ஒளிப்பதிவாளர் ராகவன் ஆகியோரையும் தீபா அழைத்துச் சென்றார்.

மண்டை உடைப்பு
போயஸ் கார்டன் வீட்டிற்குள் நுழைந்த உடன் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை அங்கிருந்த கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியது. இதில் செய்தியாளரின் மண்டை உடைந்தது ரத்தம் கொட்டியது.

செய்தியாளர் மீது வழக்கு
இந்நிலையில் அடிவாங்கி படுகாயம் அடைந்த செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் மீது குற்றச்சாட்டு
தீபாவுடன் சென்ற செய்தியாளரின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ள நிலையில் அவர் மீதே வழக்கு தொடர்ந்திருப்பது செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாருக்கு போயஸ்கார்டனில் என்ன நடந்தது என்று தெரிந்த நிலையிலும் ஒருதலைபட்சமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications