ஆர்.கே. நகரில் கொட்டும் பண மழை.. 29 லட்சம் பறிமுதல்.. பணப்பட்டுவாடா செய்த 143 கைது
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைத்து வருகின்றன. பணப்பட்டுவாடா புகார் கடுமையாக எழுந்துள்ள நிலையில், 29 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த புகாரின் பேரில் 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 29 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மத்திய படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் எந்த சம்பவம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா செய்த 143க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெப் கேமரா
பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க 100க்கும் மேற்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பாதி எங்குள்ளது என மக்களுக்கு தெரியாது. அதன் வழியாக பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள். கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்காணிப்பு தீவிரம்
இரு சக்கர வாகனம் மூலம் நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தெருத்தெருவாக சுற்றி வருகின்றனர். 30 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் உள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றனர்.

வெளியூர் நபர்கள்
ஆர்.கே. நகரில் தங்கியிருக்கும் வெளியூர் நபர்கள் வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும். இதுவரை அனுமதி பெறாமல் வந்த 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வாகனங்கள் பறிமுதல்
இனிமேல் அனுமதி இல்லாமல் வாகனங்கள் வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். தேர்தல் முடியும் வரை உரியவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்படமாட்டாது. அவற்றை தேர்தல் பணிக்கு பயன்படுத்தி கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கார்த்திகேயன் கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications