தெலுங்கு மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்க தாமதிக்கவில்லை.. சென்சார் போர்டு விளக்கம்!
தெலுங்கு மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்க தாமதிக்கவில்லை என சென்சார் போர்டு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: தெலுங்கு மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்க தாமதிக்கவில்லை என சென்சார் போர்டு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மெர்சல் திரைப்படத்தில் விமர்சிக்கப்பட்டது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதற்கு மற்ற அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தெலுங்கில் டப்பான மெர்சல்
ராகுல் காந்தியும் மெர்சல் படத்துக்கு ஆதரவாக டிவிட்டியதால் மெர்சல் படம் தேசிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் மெர்சல் படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து ஆந்திராவில் வெளியிடப்படும் என கூறப்பட்டது.

நேற்று வெளியாக வேண்டியது
இதற்காக ஆந்திராவில் உள்ள தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று ஆந்திரா முழுவதும் படம் வெளியாகும் என கூறப்பட்டது.

தாமதிக்கும் சென்சார் போர்டு
ஆனால் அறிவித்தப்படி ஆந்திராவில் மெர்சல் படம் இதுவரை வெளியாகவில்லை. தணிக்கை குழு சான்றிதழ் அளிக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

நியாயமாக சான்று
இந்நிலையில் இது குறித்து மத்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி விளக்கமளித்தார். அதாவது, தமிழ் பதிப்புக்கு வழங்கியதுபோல் தெலுங்கு மெர்சலுக்கும் நியாயமாக தணிக்கைச் சான்று வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அழுத்தம் கொடுக்க வேண்டாம்
மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்குவதில் தாமதப்படுத்துவதாக கூறுவது ஆச்சிரியமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே தணிக்கைச் சான்று தரக்கோரி தயாரிப்பாளர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேதியை முடிவு செய்யும் போதே
விஜயின் தெலுங்கு மெர்சலுக்கு தணிக்கை சான்று தர வழக்கமான நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது என்றும் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார். திரைப்படம் வெளியிடும் தேதியை முடிவு செய்யும் போது தணிக்கைக்கான காலத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications