வெள்ள பாதிப்பு.. நாளை 9 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வருகிறது
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழு நாளை தமிழகம் வருகிறது.
வட கிழக்குப் பருவ மழை இந்த முறை தமிழகத்திற்கு மிகப் பெரிய கொடையாக மட்டுமல்லாமல் துயரத்தையும் ஏற்படுத்தி விட்டது. காரணம், தமிழகத்தின் பல பகுதிகளை இந்த மழை வெள்ளக்காடாகி விட்டது.

தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன மழைக்கு தமிழகத்தில் இதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மழை வெள்ளம் காரணமாக ரூ.8,481 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், முதல் கட்டமாக ரூ.2000 கோடி உடனடியாக அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். மேலும், வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு அனுப்ப வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.
முதல்வர் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு உடனடியாக தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக முதல் கட்டமாக ரூ.940 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தது.
நிவாரண நிதி அளித்ததை தொடர்ந்து மத்திய குழுவை நாளை தமிழகம் அனுப்பவும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, மத்திய உள்துறை இணை செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 9 பேர் அடங்கிய சிறப்பு குழு தமிழகம் வருகிறது.
இக்குழுவினர் முதலில் சென்னை வருகின்றனர். அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் குழுக்களாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அங்கு வெள்ளம் பாதித்த விவசாய நிலங்கள், வீடுகள், சாலைகள் உள்ளிட்டவற்றைப் பார்த்து ஆய்வு செய்து மதிப்பீடு செய்வர்.
ஆய்வுக்குப் பின்னர் மத்திய நிதியமைச்சகத்திடம் இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.
மத்திய குழுவில் இடம் பெற்றுள்ளோர் விவரம்:
டிவிஎஸ்என் பிரசாத் (தலைவர்), மீனா, சச்தேவா, ஜர்தார், ரோஷ்மி, ஸ்மித் கோயல், நெகரா, கிருஷ்ணன் உன்னி, அரவிந்த் ஆகியோர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications