பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி இல்லை-மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி கிடையாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக பதில் அனுப்பியுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கால் நூற்றாண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இவர்களை மாநில அரசு தமக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்யலாம் என கடந்த ஆண்டி டிசம்பர் 2-ந் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனடிப்படையில் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தைக் கேட்டு கடந்த மாதம் 2-ந் தேதி மத்திய அரசுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இந்த விவகாரம் அப்போது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இதனிடையே தமிழக அரசின் கடிதத்துக்கு மத்திய உள்துறை செயலர் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது; இவ்வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகையால் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை தற்போது 2-வது முறையாக மத்திய அரசு நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications