கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தர்களுக்காக காத்திருக்கும் பல கிலோ பலகார பானைகள்!
கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஓட்டி பக்தர்களுக்காக வழங்க பல கிலோ பலகார பானைகள் நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோயிலில் தயாராக உள்ளன.
நெல்லை: கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஓட்டி நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோயிலில் பக்தர்களுக்காக வழங்க பல கிலோ பலகார பானைகள் தயாராக உள்ளன.
தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்திக்கு பானை நிறைய பலகாரம் வழங்கும் முறை இங்கு பிரசித்தம். இந்த கோயிலின் கோசாலையில் நிறைய பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. கோசாலையின் மத்தியில் இருக்கும் கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தி நாளில் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்திக்கு பானை தயாரிக்கும் பணி ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கி விடும். பானைகளில் வர்ணம் தீ்ட்டுதல், ஓவியம் வரைதல் போன்றவை மாத கணக்கில் நடக்கும். தொடக்கத்தில் 25 பானைகள் வைக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 12,500 பானைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பானையும் சுமார் 3 லிட்டர் கொள்ளளவு கொண்டவை என கூறப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்திக்கு முதல் இவைகளில் பலகாரம் நிரப்பப்பட்டு பூஜைகளில் வைக்கப்படுகிறது. மறுதினம் இவைகள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக பலகார பானைகள் வழங்கப்படுகிறது.
கிருஷ்ணர் படையலுக்கு பதார்த்தங்களான முருக்கு, சீடை, தேன்குழல், லட்டு, ஜிலேபி, பர்பி, மைசூர் பாகு, ஏணி மிட்டாய், கார சேவு என பலதரப்பட்ட பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நெல்லையைச் சேர்ந்த பிரபல ஹோட்டல்களில் பணிபுரியும் தேர்ந்த சமையல்காரர்களால் தயாரிக்கப்படுகிறது.
பிரசாதம் பெறுகிற பக்தர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே பதிவு செய்து விடுகின்றனர். இந்த பிரசித்த பெற்ற விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications