For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆய்வு நடத்திய கிரண்பேடி.. முற்றுகையிட்ட காங்.கட்சியினர்.. போலீஸுடன் தள்ளுமுள்ளு

புதுச்சேரியில் உள்ள குளம் ஒன்றை ஆய்வு நடத்த வந்த ஆளுநர் கிரண்பேடியை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள குளம் ஒன்றை ஆய்வு நடத்த வந்த ஆளுநர் கிரண்பேடியை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி அரசுக்கு எதிராக, அம்மாநில துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கிரண்பேடி மீது கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் இன்று அவருக்கு எதிராக முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

Congress members blocked Lt.Governor Kiran Bedi in Puducherry

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முத்திரபாளையத்தில் ஆய்வு நடத்த சென்றார். அப்போது கிரண்பேடியை 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். புதுச்சேரியை விட்டு ஆளுநர் வெளியேற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

இதில் நிறைய பெண் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். அரசை கட்டுப்படுத்த நினைப்பதை நிறுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். முற்றுகையிட்டவர்களை தடுக்க முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து துணை நிலை ஆளுநரை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அங்கு இருக்கும் மண்டபம் ஒன்றில் அடைந்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

English summary
Congress members blocked Lt.Governor Kiran Bedi in Puducherry. They shouted aginst her and asked her to go out from Puducherry. Police arrested 100 congress members after this protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X