கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கள்ள நோட்டு கடத்தி வந்த இருவர் கைது
சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கள்ள நோட்டுகளை கடத்தி வந்த கும்பலை சேர்ந்த 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு இளைஞர் ஒருவர் ரயில் மூலம் கள்ள நோட்டுகளை கடத்தி வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
சென்ட்ரல் உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் மாறுவேடத்தில் போலீசார் கண்காணித்தனர். அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எருக்கஞ்சேரியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் பெரிய பையுடன் நேற்றுமுன்தினம் இறங்கினார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அவர், எருக்கஞ்சேரியில் உள்ள மற்றொரு நண்பர் ரபீக் என்ற இஸ்மாயில் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றார். இதை தனிப்படையினர் மப்டியில் கண்காணித்தனர்.
பின்னர் அவர்களிடம், நாங்கள் தொழில் அதிபர்கள், எங்களது நிறுவனத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது கள்ள ரூபாய் நோட்டுக்களை சேர்த்து கொடுக்கலாம். ரூ.5 லட்சம் தருகிறோம். நீங்கள் ரூ.510 லட்சத்துக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை தாருங்கள் என்று மப்டி போலீசார் பேரம் பேசினர்.
அவர்களிடம், எருக்கஞ்சேரியில் பணத்துடன் நிற்கும்படி சாகுல் ஹமீது, ரபீக் ஆகியோர் தெரிவித்தனர். அன்று இரவு போலீசார் மப்டியில் அங்கு வந்து நின்றனர். பணம் கொடுப்பதுபோல ஒரு சூட்கேஸை கொடுத்தனர். அவர்களும் பதிலுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்தனர். திடீரென வந்தவர்கள் போலீஸ் என்று தெரியவே கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.
ஆனால் போலீசார் அதற்குள் அவர்களை துப்பாக்கிமுனையில் மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.57 லட்சத்து 90 ஆயிரம் கள்ள நோட்டுகள், கை துப்பாக்கி, 5 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. ரபீக் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ரூ.51 லட்சம் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications