ஆளுநர், முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு: ஆகஸ்ட் 4-ல் நேரில் ஆஜராக இளங்கோவனுக்கு சம்மன்
சென்னை: தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெகன் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், கடந்த ஏப்ரல் 30-இல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், பணம் பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை, ஆளுநர், முதல்வரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்துடன் அவதூறான கருத்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஆகையால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெ.ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரத்தை அரசு தரப்பு சமர்பித்துள்ளதால்,இந்த இரண்டு வழக்கிலும், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications