என்ன பண்ணலாம்?... தோழர்களுடன் பிரகாஷ் காரத் நாகையில் இன்று ஆலோசனை
நாகப்பட்டனம்: லோக்சபா தேர்தலில் அதிமுக அணியிலிருந்து வெளியேறி விட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது அடுத்த நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய நாகப்பட்டனத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
கீழ வெண்மணியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க காரத் நாகை வந்தார். வந்தவர் இந்த ஆலோசனையில் தலை காட்டியுள்ளார்.
இக்கூட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது எங்களுடன் வாங்க என்று அழைப்பு விடுத்துள்ள திமுகவுடன் போய்ச் சேருவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
சிபிஎம்மை விட கடுமையாக திமுகவைத் திட்டித் தீர்த்தவர் தா.பாண்டியன்தான். அவரே திமுக கூட்டணிக்கு ரெடியாகி விட்டார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தான் தயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.