நான்காவது நாளாக தொடரும் பட்டாசு உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தம்.. தொழிலாளர்கள் அவதி
நான்காவது நாளாக இன்றும் பட்டாசு உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது.
சிவகாசி : பட்டாசு வெடிக்க நாடு முழுக்க தடை கோரும் வழக்கில் சட்ட திருத்தம் கோரி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நான்காவது வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவே, நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக்கோரும் வழக்கை விரைந்து முடிக்கக் கோரியும், மத்திய அரசு சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 26ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக 800க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உள்ளதால், மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்வதால் தினக்கூலி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அகில இந்திய பட்டாசு சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பட்டாசு விற்பனைக்கு தடை வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு பிரதிவாதியாக நியமிக்க கோருவது, சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், பட்டாசு மற்றும் அதனைச் சார்ந்த உப தொழில் கூட்டமைப்பு சங்கத்தினர் பட்டாசு தடை வழக்கில் தங்களையும் பிரதிவாதிகளாக சேர்க்க கோரி உச்சநீதிமன்றத்தில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். மேலும் இதுகுறித்து பிரதமர், மத்திய அமைச்சர்களிடம் முறையிட உள்ளோம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தொழிலாளி ஒருவர் கூறுகையில், பட்டாசு உற்பத்தியாளர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 15 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு பின் பட்டாசு ஆர்டர்கள் அதிகளவில் வரும் என்று எதிர்பார்த்து இருந்தோம். இந்த வழக்கால் ஆர்டர்கள் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். தினக்கூலிகளான நாங்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications