போலி ஐடி அதிகாரி விவகாரம்- மாதவன் மீது அன்றே சந்தேகம் எழுப்பிய ஒன் இந்தியா தமிழ்
போலி வருமான வரித்துறை அதிகாரி விவகாரத்தில் தீபா கணவர் மாதவன் மீது அன்றே சந்தேகம் தெரிவித்தது ஒன் இந்தியா தமிழ் இணையதளம்.
Recommended Video

சென்னை: தீபாவின் வீட்டுக்குள் போலி வருமான வரித்துறை அதிகாரி நுழைந்ததாக கூறப்படும் நாடகத்தை அவரது கணவர் மாதவன்தான் நடத்தியது அம்பலமாகி உள்ளது. இந்த நாடகத்தை மாதவன் நடத்தியிருக்கலாம் என அன்றே ஒன் இந்தியா தமிழ் இணையதளம் சுட்டிக்காட்டியிருந்தது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் இல்லாத சூழலில் சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரி போல் ஒருவர் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை சந்தேகித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் திடீரென தீபாவின் வீட்டு மதில் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார் அந்த போலி அதிகாரி.

போலீசில் திடுக்கிடும் வாக்கு மூலம்
தற்போது போலீசில் சரணடைந்துள்ள போலி அதிகாரி மித்தேஷ்குமார் என்ற பிரபாகரன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தீபாவின் கணவர் மாதவன் கொடுத்த யோசனையின் அடிப்படையிலேயே தாம் நடித்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதவன் தப்பி ஓட்டம்
இதையடுத்து தற்போது மாதவன் போலீசில் இருந்து தப்ப தலைமறைவாகியுள்ளார். போலி வருமான வரித்துறை அதிகாரி விவகாரத்தில் மாதவன் தான் நாடகத்தை நடத்துகிறாரோ என அன்றே ஒன் இந்தியா தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

உண்மையானது சந்தேகம்
தீபாவின் மீதான பண மோசடி புகார்களை திசை திருப்பவும் பரபரப்பு ஏற்படுத்தவும் மாதவனே இந்த நாடகத்தை நடத்தியிருக்கலாம் எனவும் நமது ஒன் இந்தியா தமிழ் சந்தேகம் எழுப்பியிருந்தது. தற்போது மாதவனின் நாடகம்தான் போலி வருமான வரித்துறை சோதனை என்பது அம்பலமாகியுள்ளது.

தீபாவும் உடந்தை?
தமது நாடகம் அம்பலமானதால் மாதவன் போலீசில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இந்த நாடகத்துக்கு தீபாவும் உடந்தையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications