போலி ஐடி அதிகாரி விவகாரம்- மாதவன் மீது அன்றே சந்தேகம் எழுப்பிய ஒன் இந்தியா தமிழ்
போலி வருமான வரித்துறை அதிகாரி விவகாரத்தில் தீபா கணவர் மாதவன் மீது அன்றே சந்தேகம் தெரிவித்தது ஒன் இந்தியா தமிழ் இணையதளம்.
Recommended Video

சென்னை: தீபாவின் வீட்டுக்குள் போலி வருமான வரித்துறை அதிகாரி நுழைந்ததாக கூறப்படும் நாடகத்தை அவரது கணவர் மாதவன்தான் நடத்தியது அம்பலமாகி உள்ளது. இந்த நாடகத்தை மாதவன் நடத்தியிருக்கலாம் என அன்றே ஒன் இந்தியா தமிழ் இணையதளம் சுட்டிக்காட்டியிருந்தது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் இல்லாத சூழலில் சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரி போல் ஒருவர் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை சந்தேகித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் திடீரென தீபாவின் வீட்டு மதில் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார் அந்த போலி அதிகாரி.

போலீசில் திடுக்கிடும் வாக்கு மூலம்
தற்போது போலீசில் சரணடைந்துள்ள போலி அதிகாரி மித்தேஷ்குமார் என்ற பிரபாகரன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தீபாவின் கணவர் மாதவன் கொடுத்த யோசனையின் அடிப்படையிலேயே தாம் நடித்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதவன் தப்பி ஓட்டம்
இதையடுத்து தற்போது மாதவன் போலீசில் இருந்து தப்ப தலைமறைவாகியுள்ளார். போலி வருமான வரித்துறை அதிகாரி விவகாரத்தில் மாதவன் தான் நாடகத்தை நடத்துகிறாரோ என அன்றே ஒன் இந்தியா தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

உண்மையானது சந்தேகம்
தீபாவின் மீதான பண மோசடி புகார்களை திசை திருப்பவும் பரபரப்பு ஏற்படுத்தவும் மாதவனே இந்த நாடகத்தை நடத்தியிருக்கலாம் எனவும் நமது ஒன் இந்தியா தமிழ் சந்தேகம் எழுப்பியிருந்தது. தற்போது மாதவனின் நாடகம்தான் போலி வருமான வரித்துறை சோதனை என்பது அம்பலமாகியுள்ளது.

தீபாவும் உடந்தை?
தமது நாடகம் அம்பலமானதால் மாதவன் போலீசில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இந்த நாடகத்துக்கு தீபாவும் உடந்தையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications