ராஜிவ் அருகே நிற்பது நானல்ல.. சிபிஐ மாஜி அதிகாரி ரகோத்தமன் மீது சாந்தன் வழக்கு
சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான ரகோத்தமன் மீது ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். பின்னர் உச்சநீதிமன்றத்தால் சாந்தனின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்துள்ள 7 தமிழர்களில் சாந்தனும் ஒருவர். தற்போது ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக புத்தகம் எழுதிய முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மீது சாந்தன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதாவது, ரகோத்தமன் எழுதிய "ராஜீவ் கொலை வழக்கு" புத்தகத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் ராஜிவ் காந்தி அருகே காங்கிரஸ் கட்சியின் துண்டுடன் நான் நிற்பதாக ரகோத்தமன் பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த படத்தில் இருப்பது நான் இல்லை. என் மீது அவதூறு பரப்ப இத்தகவலை அவர் பதிவு செய்துள்ளார் என சாந்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.