புதிய தேடலை நோக்கி வேடலில் கூடும் தேமுதிக.. அழைக்கிறார் "கேப்டன்".. இதுதாங்க இன்விடேஷன்!
சென்னை: தேமுதிக வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்று யாருக்கும் புரியாத நிலையில் புதிராக உள்ள நிலையில் காஞ்சிபுரம் அருகே வேடல் என்ற இடத்தில் நடைபெறும் தேமுதிகவின் அதிருப்புமுனை மாநாட்டுக்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 20ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் - வேடல் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கு தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அழைப்பிதழ் கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முகப்பில் விஜயகாந்த் - பிரேமலதா
அழைப்பிதழின் முகப்பில் விஜயகாந்த்தும், பிரேமலதா விஜயகாந்ததும் இடம் பெற்றுள்ளனர். அதில் தேமுதிக நடத்தும் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளது.

துணிந்திடு... தவறுகளைக் களைந்திடு
அதற்குக் கீழே துணிந்திடு தவறுகளைக் களைந்திடு புதிய மாற்றத்திற்கான ஆரம்பம் என்ற வாசகத்துடன், ஒன்றிணைவோம்.. வென்றிடுவோம் என்று இடம் பெற்றுள்ளது.

எழுச்சி உரை
அடுத்த பக்கத்தில் மாநாட்டிற்குத் தலைமையேற்று விஜயகாந்த் எழுச்சி உரை ஆற்றவிருப்பதைச் சொல்லும் தகவல் இடம் பெற்றுள்ளது. சிறப்புரையை பிரேமலதா விஜயகாந்த் ஆற்றவுள்ளார்.

கட்சிப் பிரமுகர்கள் பேச்சு
அடுத்த பக்கங்களில் மாநாட்டில் கலந்து கொண்டு பேசவுள்ள கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோரின் பெயர்ப் பட்டியல் இடம் பெற்றுள்ளது. வாழ்த்துரை வழங்குவோரில் முதல் பெயராக எல்.கே.சுதீஷ் பெயர் இடம் பெற்றுள்ளது.

பனை ஓலைகளும்.. லேப்டாப்புடன் விஜயகாந்த்தும்
அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தில் காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும் ஆட்சி மாறட்டும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும் அதில் லேப்டாப்புடன் விஜயகாந்த் அமர்ந்திருப்பதைப் போன்ற படமும், கூடவே பனை ஓலைகளின் பின்னணியில் தேமுதிகவின் பல்வேறு இணையதள முகவரிகள், ஆப் விவரங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சமூக வலைதளங்களின் முக்கியத்துவத்தை இவை உணர்த்துவதாக உள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
இதுதவிர பத்திரிகையாளர்களுக்கு மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. அதில் மாநாட்டின் மேடையின் முன் பகுதியில் பத்திரிகையாளர்கள் சிறப்பான முறையில் செய்தி சேகரிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்சாகத்தில் தொண்டர்கள்
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் மாநாடு நடத்திய பின்னர்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். அதேபோல இந்த முறையும் அவர் மாநாட்டைக் கூட்டியுள்ளார். இந்த மாநாட்டுக்குப் பிறகு அவர் போகவுள்ள கூட்டணி எது என்பதை அறிய தேமுதிகவினர் ஆர்வமாக உள்ளனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications