புதிய தேடலை நோக்கி வேடலில் கூடும் தேமுதிக.. அழைக்கிறார் "கேப்டன்".. இதுதாங்க இன்விடேஷன்!
சென்னை: தேமுதிக வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்று யாருக்கும் புரியாத நிலையில் புதிராக உள்ள நிலையில் காஞ்சிபுரம் அருகே வேடல் என்ற இடத்தில் நடைபெறும் தேமுதிகவின் அதிருப்புமுனை மாநாட்டுக்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 20ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் - வேடல் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கு தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அழைப்பிதழ் கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முகப்பில் விஜயகாந்த் - பிரேமலதா
அழைப்பிதழின் முகப்பில் விஜயகாந்த்தும், பிரேமலதா விஜயகாந்ததும் இடம் பெற்றுள்ளனர். அதில் தேமுதிக நடத்தும் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளது.

துணிந்திடு... தவறுகளைக் களைந்திடு
அதற்குக் கீழே துணிந்திடு தவறுகளைக் களைந்திடு புதிய மாற்றத்திற்கான ஆரம்பம் என்ற வாசகத்துடன், ஒன்றிணைவோம்.. வென்றிடுவோம் என்று இடம் பெற்றுள்ளது.

எழுச்சி உரை
அடுத்த பக்கத்தில் மாநாட்டிற்குத் தலைமையேற்று விஜயகாந்த் எழுச்சி உரை ஆற்றவிருப்பதைச் சொல்லும் தகவல் இடம் பெற்றுள்ளது. சிறப்புரையை பிரேமலதா விஜயகாந்த் ஆற்றவுள்ளார்.

கட்சிப் பிரமுகர்கள் பேச்சு
அடுத்த பக்கங்களில் மாநாட்டில் கலந்து கொண்டு பேசவுள்ள கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோரின் பெயர்ப் பட்டியல் இடம் பெற்றுள்ளது. வாழ்த்துரை வழங்குவோரில் முதல் பெயராக எல்.கே.சுதீஷ் பெயர் இடம் பெற்றுள்ளது.

பனை ஓலைகளும்.. லேப்டாப்புடன் விஜயகாந்த்தும்
அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தில் காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும் ஆட்சி மாறட்டும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும் அதில் லேப்டாப்புடன் விஜயகாந்த் அமர்ந்திருப்பதைப் போன்ற படமும், கூடவே பனை ஓலைகளின் பின்னணியில் தேமுதிகவின் பல்வேறு இணையதள முகவரிகள், ஆப் விவரங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சமூக வலைதளங்களின் முக்கியத்துவத்தை இவை உணர்த்துவதாக உள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
இதுதவிர பத்திரிகையாளர்களுக்கு மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. அதில் மாநாட்டின் மேடையின் முன் பகுதியில் பத்திரிகையாளர்கள் சிறப்பான முறையில் செய்தி சேகரிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்சாகத்தில் தொண்டர்கள்
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் மாநாடு நடத்திய பின்னர்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். அதேபோல இந்த முறையும் அவர் மாநாட்டைக் கூட்டியுள்ளார். இந்த மாநாட்டுக்குப் பிறகு அவர் போகவுள்ள கூட்டணி எது என்பதை அறிய தேமுதிகவினர் ஆர்வமாக உள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications