மாட்டிறைச்சி தடைக்கு எதிராக களமிறங்கிய திமுக.. சட்டசபையில் தனிநபர் தீர்மானம் தாக்கல்
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக சார்பில் சட்டசபையில் இன்று, தனிநபர் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: மாட்டிறைச்சியை மத்திய அரசு தடை செய்ததை எதிர்த்து சட்டசபையில் திமுக தனிநபர் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
இறைச்சிக்காக மாடு, எருது, கன்றுக்குட்டி, ஒட்டகம் உள்ளிட்ட மிருகங்களை விற்கக் கூடாது என மத்திய அரசு கடந்த மாதம் சட்டம் இயற்றியது. இதற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், யூனியன் பிரதேசம் புதுவையிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பாக தமிழகத்தில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த சூழலில் இன்று சட்டசபை கூடியுள்ளது.
முன்னதாக சட்டசபையில் திமுகவின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அண்ணா அறிவாயலத்தில் நேற்று முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தற்போது இன்று கூடவுள்ள சட்டசபையில் திமுக மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தனிநபர் தீர்மானத்தை கொண்டு வரும்என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். மத்திய அரசுக்கு எதிராக ஆளும் கட்சி குரல் வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்காது என்றே தெரிகிறது.
இது தவிர கூவத்தூர் பேரம் குறித்தும் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதனால் சட்டசபையில் சூடான விவாதங்கள் நடைபெறும் என்றும் தெரிகிறது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications