ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- திமுக திடீர் வியூகம்!
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தங்களுடன் கமுக்கமாக கைகோர்த்துவிட்டதால் இனி குடைச்சல் இல்லை என நினைத்து கொண்டிருக்கும் எடப்பாடி தரப்புக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதிர்ச்சி வைத்தியம் தர திமுக வியூகம் வகுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் சசிகலா, தினகரன் தரப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறது எடப்பாடி கோஷ்டி. இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என நினைக்கிறது எடப்பாடி தரப்பு.

மொய் விருந்து
இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களுடன் நெருக்கம் காட்ட தொடங்கியது எடப்பாடி அணி. அத்துடன் திமுக தலைமையையும் சமாளிக்க 'மொய் விருந்து' நடத்தியும் பார்த்தது.

திமுக மீது அதிருப்தி
அதேநேரத்தில் எடப்பாடி அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் திமுகவும் அமைதி காப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிருப்தியை சமாளிக்க திமுக தடாலடி வியூகம் வகுத்து வருகிறது.

நம்பிக்கை இல்லா தீர்மானம்
ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாரை ஆதரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அதிரடியாக எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம் என திட்டமிட்டுள்ளதாம் திமுக.
Recommended Video


திடீர் அதிரடி ஏன்?
ஏற்கனவே கூவத்தூர் நிகழ்வுக்குப் பிறகு, தி.மு.கவின் வேகம் போதவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதை சரிசெய்யும் வகையில்தான் இப்படி ஒரு அதிரடியை காட்டலாம் என நினைக்கிறதாம் திமுக தலைமை.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. 11 டூ 11 பார்களுக்கு செக்.. அரசு அதிரடி -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்!












Click it and Unblock the Notifications