திருக்குறளையும் மூவேந்தர்களையும் மேற்கோள்காட்டி உரையை தொடங்கிய முதல்வர் எடப்பாடி
திருக்குறளை மேற்கோள் காட்டி உரையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.
Recommended Video

சென்னை: திருவிடந்தை ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் சென்னையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் 10-ஆவது பிரம்மாண்ட கண்காட்சி இன்று நடைபெற்று வருகிறது.

இதில் 47 நாடுகளைச் சேர்ந்த ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சி தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிவைக்கப்பட்டது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில் தமிழகத்தில் முதல் முறையாக ராணுவ தளவாட கண்காட்சி நடப்பதை வரவேற்கிறோம். தொழில் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.
அனைத்து தொழில் முதலீடுகளுக்கும் ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படும். தமிழகத்தில் ராணுவ தளவாட கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுத்த மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று ஓபிஎஸ் பேசினார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் 24 சதவீதம் தமிழக பங்கு வகிக்கிறது.
தமிழர்கள் வீரமிக்கவர்கள், தங்கள் தாய் நாட்டுக்கான கடமையையாற்றுவார்கள் என்றார். தமிழக பண்டைய ஆட்சியாளர்கள் சேர, சோழ, பாண்டியர்களை மேற்கோள்காட்டியும் உரை நிகழ்த்தினார் முதல்வர்.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications