ஊருக்குள் குளியல் போடும் யானைகள்... காட்டுக்குள் துரத்த முடியாமல் வனத்துறையினர்: வீடியோ
காட்டுக்குள்ளிருந்து வெளியேறி ஊருக்குள் வந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் துரத்த, யானைகளோ குளத்தில் இறங்கி நீராடுவதால் செய்வதறியமல் வனத்துறையினர் திண்டாடி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: குன்னூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்தன. அவற்றை வனத்துறையினர் துரத்த, குளத்துக்குள் குதித்து அதிகாரிகளுக்கு யானை கூட்டம் ஆட்டம் காட்டுகிறது
குன்னூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி, ஊருக்குள் நுழைந்தன. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் பட்டாசு கொளுத்தி, அந்த வெடி சத்தம் மூலம் யானைகளை காட்டுக்குள் துரத்த முயற்சிகள் செய்தனர்.

ஆனால் யானைகள் கூட்டமாக சென்று அருகில் இருந்த குளத்துக்குள் குதித்து ஆனந்த நீராடி மகிழ்ந்து வருகின்றன. அந்த யானைகளை குளத்தில் இருந்து வெளியேற்றும் வழி தெரியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications