படுகொலை செய்யப்பட்ட திவிக தொண்டர் பாரூக் குழந்தைகளின் படிப்பை ஏற்கிறது எவிடென்ஸ்
மதங்களை எதிர்த்து மனிதம் பேசிய பாரூக் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இரண்டு குழந்தைகளுக்கான கல்வி செலவுகளை எவிடென்ஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
கோவை: திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பாரூக் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவர் மதங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்து மனிதங்களை இணைக்க முயற்சித்தார். இதுவே அவர் உயிரைக் குடித்துவிட்டது.
கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பாரூக். 31 வயதான இவர் உக்கடம் பழைய இரும்பு சந்தையில் வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை பாரூக்கை செல்போனில் அழைத்த மர்ம நபர் ஒருவர் தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென, உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறு கூறியுள்ளார்.

வெறிச் செயல்
இதனையடுத்து, தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு சென்ற பாரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர்.

பரிதாப பலி
ரத்த வெள்ளத்தில் மிதந்த பரூக் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கு காரணம்?
குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த பாரூக்கை திவிக தலைவர் கொளத்தூர் மணி தீவிர முயற்சி செய்து அவரை வெளியே எடுத்துள்ளார். தான் வெளியே வருவதற்கு உறுதுணையாய் இருந்த திவிக அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட பாரூக், தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தீவிரத்தன்மைதான் அவரை பலி வாங்கி விட்டதாக திவிகவினர் தெரிவிக்கின்றனர்.

இருவர் சரண்
இதனிடையே, போத்தனூர் பகுதியை சேர்ந்த அன்சாத் என்பவர் கோவை 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை வருகின்ற 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார். இதனையடுத்து, போத்தனூரைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கொலையில் 6 பேர்..
இந்நிலையில், "என் மகனை ஒரு ஆள் அல்ல.. ஐந்தாறு பேர் சேர்ந்து கொலை செய்து இருக்கின்றனர். இந்த விஷயம் போலிஸுக்கு தெரியும். ஆனால் பிரச்சனை வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்" என்று பாரூக்கின் அப்பாவும் உறவினர்களும் கூறியுள்ளனர்.
குழந்தைகளின் கல்வி
இளம் வயதில் படுகொலையான பாரூக்கிற்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். தகப்பன் மறைவினால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க எவிடென்ஸ் என்ற அமைப்பு குழந்தைகளின் அனைத்து கல்வி செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தனது முகநூல் பக்கத்தில் எவிடென்ஸ் கதிர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைப்போம் என்பதை உறுதி அளிக்கிறேன் என்று எவிடென்ஸ் கதிர் உறுதியளித்துள்ளது பாரூக்கின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications