திருச்சி காவிரியாற்று மணலில் புதைந்து மாலையிட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் - கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் அய்யாகண்ணு தலைமையில் காவிரியாற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
Recommended Video
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் காவிரியாற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை, நெல்லை, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருச்சியில் நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காவிரி ஆற்று மணலில் புதைந்து போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காவிரியாற்று மணலில் புதைந்து மாலையிட்டும், நாமமிட்டும், மண்டை ஓட்டை ஏந்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#WATCH Tamil Nadu:Farmers in Trichy protest by partially burying themselves in sand on banks of Cauvery river, demand the formation of #CauveryManagementBoard. Farmer Leader Ayyakannu also present pic.twitter.com/5acGOu4OTX
— ANI (@ANI) April 6, 2018
இதையடுத்து மணலை அகற்றி புதைந்திருந்த அவர்களை காவல்துறையினர் மீட்டனர். கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில் போலீசார் மண்ணில் புதைந்திருந்த விவசாயிகளை மீட்டு கைது செய்தனர்.
Tamil Nadu: Farmers in Trichy who were protesting by partially burying themselves in sand on banks of Cauvery river demanding the formation of #CauveryManagementBoard , have been evicted by Police pic.twitter.com/HaZh9MGGnA
— ANI (@ANI) April 6, 2018