காவிரி: திருச்சியில் மீண்டும் இரவில் போராட்டம் என மாணவர்கள் எச்சரிக்கையால் பதற்றம்- போலீஸ் குவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருச்சியில் திடீரென 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருச்சியில் திடீரென 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரவிலும் மீண்டும் போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் அறிவித்துள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ரயில் மறியல் போராட்டங்கள், சாலை மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று போராட்ட களத்தில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தின. சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடந்தது. அதை நடத்தக் கூடாது என்று சேப்பாக்கம் மற்றும் அண்ணாசாலையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இதனால், அண்ணா சாலை, போர்க் களமாக காட்சி அளித்தது.
பாமக உள்பட பல்வேறு கட்சிகளின் இன்றும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், திருச்சியில், 500க்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் குவிந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கோரி கடந்தாண்டு போராட்டம் நடந்த பகுதியில் இந்தப் போராட்டம் நடந்ததால், பதற்றம் ஏற்பட்டது.
சில நிமிடங்களில் கூட்டம் அதிகரிக்கவே, போலீசார் மாணவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். அப்போது, நாங்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.. ஆனால் இரவில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் எச்சரித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. மீண்டும் போராட்டக்காரர்கள் வராமல் இருக்க, போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications