காவிரி: திருச்சியில் மீண்டும் இரவில் போராட்டம் என மாணவர்கள் எச்சரிக்கையால் பதற்றம்- போலீஸ் குவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருச்சியில் திடீரென 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருச்சியில் திடீரென 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரவிலும் மீண்டும் போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் அறிவித்துள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ரயில் மறியல் போராட்டங்கள், சாலை மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று போராட்ட களத்தில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தின. சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடந்தது. அதை நடத்தக் கூடாது என்று சேப்பாக்கம் மற்றும் அண்ணாசாலையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இதனால், அண்ணா சாலை, போர்க் களமாக காட்சி அளித்தது.
பாமக உள்பட பல்வேறு கட்சிகளின் இன்றும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், திருச்சியில், 500க்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் குவிந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கோரி கடந்தாண்டு போராட்டம் நடந்த பகுதியில் இந்தப் போராட்டம் நடந்ததால், பதற்றம் ஏற்பட்டது.
சில நிமிடங்களில் கூட்டம் அதிகரிக்கவே, போலீசார் மாணவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். அப்போது, நாங்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.. ஆனால் இரவில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் எச்சரித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. மீண்டும் போராட்டக்காரர்கள் வராமல் இருக்க, போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications