நிர்மலா தேவி விவகாரம்: சட்டத்தின் முன் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும் - ஜி.கே. வாசன்
மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல்: சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்
கல்லூரி மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்குள்ளாக்கும் கொடுமை குறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்துவந்த நிர்மலா தேவியை பணியிடை நீக்கம் செய்தது சரியான முடிவு. கல்லூரியில் பணிபுரிந்த இந்த பேராசிரியை செல்போனில் பேசிய ஆடியோ வெளியீடு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கவலையும் அளிக்கிறது. காரணம் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளிடம் பேராசிரியை தவறான முறையில் பேசியதும், அதுதொடர்பாக அந்த மாணவிகள் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த தவறான போக்குக்கு காரணமாக இருந்தவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் கண்டறிய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியையை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முழு விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அத்தனை பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை.
இந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஒட்டு மொத்த தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையத்திலேயே இது போன்ற குற்றச்செயல்கள் நடைபெறுவது என்பது மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது.
கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர் பணி என்பது புனிதப்பணி. மாணவர்களுக்கு நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். அப்பேற்பட்ட உகந்த பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தான் மாணவர்களின் வருங்கால நல்வாழ்க்கைக்கு முன்னோடியாக திகழ்பவர்கள். அப்படி இருக்கும் போது ஒரு பேராசிரியை தவறான வழியில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற ஒரு சம்பவம் இனி எந்த ஒரு கல்வி நிலையத்திலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது நடைபெற்ற சம்பவத்திற்கு உரிய விசாரணை நடத்தி, இச்சம்பவத்தின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப உடனடி நடவடிக்கை எடுத்து, தண்டனையையும் வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications