கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு... ஆளுநர் பன்வாரிலால் உரையிலும் இடம்பெற்ற நீண்ட நாள் கோரிக்கை!
தமிழக மீனவர்கள் இலங்ககைக் கடற்படையால் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பது மட்டுமே ஒரே வழி என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக மீனவர்கள் இலங்ககைக் கடற்படையால் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பது மட்டுமே ஒரே வழி என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையில் தாக்குதல் குறைந்துள்ளதாகவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தைத் தொடங்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசின் செயல்பாடுகள் குறித்து, இது வரை தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார். அப்போது அவர், பாக் ஜலசந்தியில் மீனவர்களின் உரிமையை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறைந்துள்ளது.

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்கள் வசம் இருக்கும் படகுகளை விடுவிக்கவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கச்சத்தீவை மீட்க மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர்கள் பிரச்னைக்கான ஒரே வழி என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு விரைவில் அனுமதியளிக்க மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொள்வதாகவும், தமிழகத்தின் 16 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை ஏற்படப்பட்டுள்ளதற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். எனினும் இது மற்ற மாவட்டங்களிலும் வர வேண்டும் என்றார்.
பட்டா மாறுதல் உட்பட இணையதளம் வழியிலான அரசு பணிகள் மக்களுக்கு பயனளிக்கிறது. மக்களின் சிரமங்களை போக்க 5 ஆண்டுகளில் 300 இ-சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றம் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications