ஏரி, குளத்தை ஆக்கிரமித்தால் இதுதான் நடக்கும் என சரியான பாடம்... அரசுக்கு ஹைகோர்ட் செம "குட்டு"
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளமானது ஏரி குளங்களை ஆக்கிரமித்தால் எப்படியெல்லாம் பாதிப்பு ஏற்படும் என சரியான பாடத்தை கற்றுத் தந்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், சென்னையில் மழைநீர் வடிகாலுடன் கழிவுநீர் இணைக்கப்படுவதால் அடைப்புகள் ஏற்படுகின்றன. இந்த அடைப்புகளை மனிதர்களை வைத்து மாநகராட்சி நிர்வாகம் பழுது பார்க்கிறது.

சென்னையில் பல வணிக வளாகம், அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க விரைவில் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்றார்.
அப்போது தலைமை நீதிபதி கவுல், ஏரிகள், குளங்கள், நீர்வழிகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதால் எப்படியெல்லாம் பாதிப்பு வரும் என்பதை சென்னையில் தேங்கியுள்ள மழை வெள்ளம் நல்ல பாடமாக மக்களுக்கும், அரசுக்கும் கற்றுத்தந்துள்ளது. அடுத்த பருவமழையின் போதாவது விழிப்புடன் செயல்பட வேண்டும். தற்போதைய நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு முழுமையாக ஈடுபடவேண்டும் என காட்டமாக தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications