குடிசை வீடு.. 3 வருடம்.. டங்கல் பட பாணியில் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையை மாற்றிய நபர்!
நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இருக்கிறார்.
Recommended Video

சென்னை: நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இருக்கிறார். இதற்கு பின்பு இன்னொரு நபரின் உழைப்பும் கூட இருக்கிறது.
அபிஷேக் நாயர் என்ற மும்பையை சேர்ந்த பயிற்சியாளர்தான் இவருக்கு புதிய விளையாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐபிஎல், ஒருநாள் என எந்த போட்டியிலும் சரியாக வாய்ப்பு இல்லாத காரணத்தால் தினேஷ் தன்னுடைய விளையாட்டு முறையை மாற்றியுள்ளார்.
அதற்கு அபிஷேக் பெரிய அளவில் உழைத்துள்ளார். 'டங்கல்' படத்தில் வருவது போல தினேஷ் கார்த்திக்கை புதிய பயிற்சி முறைகளால் கொடுமைப்படுத்தியுள்ளார்.

சிறிய வீடு
அபிஷேக் நாயர் அவருக்கு சொந்தமாக மும்பையில் இருக்கும் சிறிய குடிசை போன்ற வீட்டில்தான் தினேஷ் கார்த்திக்கை தங்க வைத்துள்ளார். பயிற்சி கொடுக்கும் சமயங்களில் எல்லாம் அந்த வீட்டிற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். சென்னையில் எவ்வளவு பெரிய வீடு இருந்தாலும் இனி உனக்கு இதுதான் வீடு என்று அங்கேயே அடைத்து வைத்துள்ளார்.

பெரிய கொடுமை
பயிற்சி நாட்கள் முழுவதும் அதிகாலையிலேயே எழுப்பி பயிற்சி செய்ய அழைத்து சென்று விடுவார். மும்பையில் சிறப்பாக செயல்படும் மூன்று பயிற்சியாளர்களிடம் மாற்றி மாற்றி நாள் முழுக்க தினேஷ் கார்த்திக்கை பயிற்சி பெற வைத்துள்ளார். மதியம் மட்டுமே 3 பயிற்சி சுற்றுகள் நடக்கும் என்று கூறியுள்ளார். உலகில் யாருமே இப்படி பயிற்சி செய்தது இல்லை என்றுள்ளார்.

3 வருட உழைப்பு
இந்த பயிற்சியை அபிஷேக், தினேஷ் கார்த்திக்குக்கு ஒருநாள் இரண்டு நாள் கொடுக்கவில்லை. மொத்தம் 3 வருடம் இப்படி பயிற்சி கொடுத்துள்ளார். இந்திய அணியில் இடம் கிடைக்காமல் விட மாட்டேன் என்று குறிக்கோளுடன் தினேஷ் கார்த்திக்கும் இப்படிப்பட்ட பயிற்சியில் இறங்கி இருக்கிறார். 2014ல் பயிற்சி தொடங்கி இருக்கிறது.

புதிய நுட்பம்
இதற்காக 'விஷுவலைசேஷன்' என்னும் புதிய பேட்டிங் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். பந்தை பார்க்காமல், பவுலரின் கை அசைவை வைத்து அது எவ்வளவு வேகத்தில், எந்த திசையில் வரும் என எல்லாவற்றையும் நொடி பொழுதில் கணிக்கும் முறையாகும். இதைத்தான் நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

2வது மனைவி
அபிஷேக் நாயரை தினேஷ் கார்த்திக்கின் இரண்டாவது மனைவி என்றும் கிண்டலாக அழைக்கிறார்கள். அபிஷேக் இல்லையென்றால் தினேஷுக்கு என்ன செய்வது என்றே தெரியாது என்றுள்ளார்கள். சின்ன சின்ன விஷயங்களை கூட அபிஷேக் சொல்லித்தான் தினேஷ் மாற்றி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இன்னும் கூட இருக்கிறது
இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில்தான் இவருக்கு அணியில் தற்போது முக்கியமான இடம் கிடைத்து இருக்கிறது. கொல்கத்தா அணிக்கும் தற்போது கேப்டனாக மாறியுள்ளார். இந்த பயிற்சி இன்னும் தொடர இருக்கிறது. உலக கோப்பை அணிதான் இவர்களின் அடுத்த குறிக்கோள் என்று கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications