ரயில் பெட்டிகளில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் - ஐசிஎப் மேலாளர் பேட்டி!
சென்னை: ரயில் பெட்டிகளுக்குள்ளே பயணிகளின் பாதுகாப்பிற்காக விரையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார். மேலும், புதிய ரயில் பெட்டி ஒன்றினை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே பாதுகாப்பு படை உதயமான 59வது ஆண்டு விழா சென்னை அயனாவரத்தில் உள்ள ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தெற்கு ரயில்வேயின் தலைமை பொதுமேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி தலைமை தாங்கினார்.

பாதுகாப்பு படையினர்:
ரயில்வே பாதுகாப்பு படையின் தலைமை பாதுகாப்பு கமிஷனர் எஸ்.சி.பாரி முன்னிலை வகித்தார். திறந்த ஜீப்பில் வலம் வந்தவாறு ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை வஷிஷ்டா ஜோஹ்ரி ஏற்றுக்கொண்டார்.

6 கோட்ட பணியாளர்கள்:
இதனையடுத்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய ரயில்வே பாதுகாப்பு படையினர் 8 பேர் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினரின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கண்காணிப்பு கேமராக்கள்:
முன்னதாக வஷிஷ்டா ஜோஹ்ரி, "ரயில் பெட்டியின் உள்ளே பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது. ரெயில் பயணிகளிடம் இருந்து பெறுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் ரயில் பெட்டியின் உள்ளே நிரந்தரமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

தீர்வு காண நடவடிக்கை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அசம்பாவிதம், பயணிகளின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ரயில் விபத்துக்களை தடுக்க "இஸ்ரோ"வுடன் இணைந்து தொழில்நுட்ப முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஜூன் மாதத்தில் நிறைவு:
மூர் மார்க்கெட் வளாகம் மற்றும் பேசின் பிரிட்ஜ் இடையேயான 5 மற்றும் 6-வது வழித்தட பணிகள் வருகிற ஜூன் மாதம் நிறைவடையும்" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications