15 அம்ச கோரிக்கை: தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டம்- பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைது!!
சென்னை: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போராட்டம் நாளை மறுநாள் திங்கள்கிழமை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ, கடந்த நான்கரை ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் உட்பட அனைத்து நிலை ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் படிகள் உட்பட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.

கோரிக்கைகள்
அதேபோல் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும், தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை தமிழ்மொழி வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என 15 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ முன்வைத்து வருகிறது.

தொடர் மறியல்
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனமாக இருக்கும் தமிழக அரசைக் கண்டித்து இன்று முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ அமைப்பில் உள்ள ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்தன.

மறியல் போராட்டம்
இன்று முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் தொடங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பல்லாயிரக்கணக்கில் இந்த தொடர் மறியலில் பங்கேற்று கைதாகினர்.

10,000-க்கும் அதிகமானோர்...
இன்று மாநிலம் முழுவதும் 10,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவண்ணாமலை தருமபுரி, கோவை, திருப்பூர் என அனைத்து மாவட்டங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது.

பள்ளிகள் முடங்கும் நிலை...
ஒவ்வொரு ஒன்றியம் வாரியாகவும் அடுத்தடுத்து இந்த போராட்டங்களில் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இது நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. இதனால் பிப்ரவரி 1-ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications