பிரச்சார வேனை விட்டு கீழே இறங்கி... ‘நாடாளுமன்றத்தில்’ ஏறி பேசும் ஜெயலலிதா
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் லோக்சபா தேர்தல் பிரசாரம் புதிய பொலிவுடன் களை கட்டியுள்ளது.மேலும், கடந்த தேர்தல்களின்போது அவர் கடைப்பிடித்த ஒரு உத்தியை தற்போது கைவிட்டுள்ளதையும் காண முடிகிறது.
சமீபத்திய தேர்தல்களின்போது, அதாகப்பட்டது கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரம் உள்பட, அனைத்திலும் அவர் வேனில் அமர்ந்தபடி எழுதி வைத்த அட்டையில் இடம் பெற்றிருந்த வாசகங்களைப் படித்தார்.
இந்த முறை அதை சற்றே மாற்றியுள்ளார். அதாவது வேனை விட்டு இறங்கி வி்ட்டார். மேடையில் ஏறிப் பேசி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

எழுதி... படித்து... பிரச்சாரம்!
பிற தலைவர்களைப் போல ஜெயலலிதா பிரசாரம் செய்வதில்லை பொதுவாக. எழுதி வைத்துப் படிப்பதையே தனது பாணியாகக் கொண்டுள்ளார்.

சின்னச் சின்ன மாற்றங்கள்...
ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா. அவரது ஒரு பிரசாரப் பேச்சைக் கேட்டால் போதும். கடைசிப் பிரசாரம் வரை அவரது பேச்சு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சின்னச் சின்ன மாற்றங்களைத் தவிர.

கலைஞர் வழி....
வழக்கமாக தேர்தல் பிரசாரங்களின்போது பிற தலைவர்கள் மேடை ஏறிப் பேசுவதைப் பார்க்கலாம். திமுக தலைவர் கருணாநிதி பெரும்பாலம் மேடை ஏறிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சில சமயங்களில் மட்டும்....
ஆனால் ஜெயலலிதா கடந்த சில தேர்தல்களாக வேனுக்குள் அமர்ந்தபடிதான் பேசி வருகிறார். எப்போதாவது அரிதாகத்தான் அவரை மேடையில் ஏறிப் பேசுவதைப் பார்க்க முடியும்.

பெரிய... பெரிய அட்டை
கடந்த சில தேர்தல்களாக அவர் வேனில் அமர்ந்தபடிதான் பேசி வந்தார். பெரியபெரிய அட்டையில் எழுதி வைத்து அதை வாசிப்பார். பின் சீட்டில் அமர்ந்திருக்கும் சசிகலா அல்லது வேறு யாராவது ஒரு பெண் ஜெயலலிதா வாசித்து முடித்த அட்டையை வாங்கி திரும்ப அதே ஆர்டரில் வைத்துக் கொள்வார்.

திரும்பவும் அதே...
அடுத்த ஊர் போனதும் மறுபடியும் அதே அட்டையை எடுத்து ஜெயலலதா வாசிபப்பார். மறுபடியும் ஆர்டர் போடுவார் பின் சீட் பெண்மணி.

டெல்லிக்குப் போக ஒத்திகையா...
ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா கீழே இறங்கி விட்டார். அதாவது மேடையேறிப் பேசி வருகிறார். அதே பிரசார வேனில்தான் அவர் பயணிக்கிறார். இருப்பினும் பிரசாரம் செய்யும் ஊரில் போடப்பட்டிருக்கும் பிரமாண்ட மேடையில் ஏறிப் பேசுகிறார். இருப்பினும் வழக்கம் போல எழுதி வைத்தேப் பேசி வருகிறார்.

நாடளுமன்ற மேடை....
ஒவ்வொரு ஊரிலும் மறக்காமல் பிரமாண்டமான நாடாளுமன்ற வடிவிலான மேடையைப் போட்டிருக்கிறார்கள். அந்த மேடையில் நின்றபடிதான் ஜெயலலிதா பேசுகிறார்.

உறுதிமொழி...
ஒவ்வொரு கூட்டத்திலும், கூட்டத்தினரைப் பார்த்து செய்வீர்களா என்று மக்களிடம் உறுதி மொழி வாங்காமல் விட மாட்டார் ஜெயலலிதா. இந்த முறையும் அவர் அதே போல பேச்சுக்கு இடை இடையே செய்வீர்களா என்று தவறாமல் கேட்டு வருகிறார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications