சசிகலா, பிரதாப் ரெட்டிக்கு சம்மன்... விரிவடையும் ஜெ. மரண விசாரணை வளையம்!
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் கேட்டு சசிகலா, பிரதாப் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அளித்துள்ளது.
சென்னை : ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கமளிக்குமாறு சசிகலா மற்றும் அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம் தேதி வரை அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அரசு நியமித்த ஒரு நபர் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவர் சரவணன், டாக்டர் பாலாஜி, ஜெ. தீபா, மாதவன், தீபக் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் சசிகலாவிற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சிகிச்சை காலம் முழுவதும் அவருடனே இருந்தார் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விளக்கம் கேட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்குமாறு அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் 3 பேரும் பதில் அளிக்குமாறு ஆறுமுகசாமி கமிஷன் சம்மனில் குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதியுடன் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கான காலக்கெடு முடியும் நிலையில், 15 நாட்கள் அவகாசம் கொடுத்து ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அளித்துள்ளதால் விசாரணை ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டதற்கான அறிவிப்பு இன்றோ நாளையோ வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications