சசிகலா, பிரதாப் ரெட்டிக்கு சம்மன்... விரிவடையும் ஜெ. மரண விசாரணை வளையம்!
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் கேட்டு சசிகலா, பிரதாப் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அளித்துள்ளது.
சென்னை : ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கமளிக்குமாறு சசிகலா மற்றும் அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம் தேதி வரை அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அரசு நியமித்த ஒரு நபர் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவர் சரவணன், டாக்டர் பாலாஜி, ஜெ. தீபா, மாதவன், தீபக் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் சசிகலாவிற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சிகிச்சை காலம் முழுவதும் அவருடனே இருந்தார் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விளக்கம் கேட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்குமாறு அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் 3 பேரும் பதில் அளிக்குமாறு ஆறுமுகசாமி கமிஷன் சம்மனில் குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதியுடன் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கான காலக்கெடு முடியும் நிலையில், 15 நாட்கள் அவகாசம் கொடுத்து ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அளித்துள்ளதால் விசாரணை ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டதற்கான அறிவிப்பு இன்றோ நாளையோ வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications