கருணாநிதி 10 நாட்களில் கட்சிப் பணிக்கு திரும்புவார்... கனிமொழி நம்பிக்கை
திமுக தலைவர் கருணாநிதி இன்னும் 10 நாட்களில் கட்சிப் பணிக்கு திரும்புவார் என்று கனிமொழி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: உடல் நலம் குன்றியுள்ள திமுக தலைவர் கருணாநிதி இன்னும் 10 நாட்களில் கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்று அவரது மகளும், ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகார பூர்வமாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. வழக்கமாக கருணாநிதி உட்கொள்ளும் மருந்து ஒன்று ஒத்துக் கொள்ளாமல் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு டாக்டர்கள் தினமும் வீட்டிற்கு சென்று மருத்துவம் பார்த்து வருகின்றனர். தொலைபேசி வாயிலாகவே அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் மகனும், கட்சியின் பொருளாளருமான மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோபாலபுரம் சென்று தந்தை கருணாநிதியை பார்த்துவிட்டு திரும்பிய கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கருணாநிதிக்கு உடல் நலம் குணமடைந்து வருவதாகவும், இன்னும் 10 நாட்களில் கட்சிப் பணிகளில் அவர் ஈடுபடுவார் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்ததாகவும் கனி மொழி கூறினார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் அனைத்து கட்சியினரும் ஓராணியில் திரள்வது போல் தமிழ்நாட்டில் நடப்பதில்லை என்றும், காவிரி பிரச்சனை குறித்து ராஜ்ய சபாவில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்றும் கனி மொழி தெரிவித்துள்ளார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications