உயிரோடு இருப்பவர் இறந்ததாக போலி கையெழுத்து...."தாது மணல்" வைகுண்டராஜன் மீது நில அபகரிப்பு புகார்!
சென்னை: தாது மணல் தொழிலதிபர் வைகுண்டராஜன் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தாது மணலை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு கடத்துகிறார் என்பது வைகுண்டராஜன் மீதான புகார். அண்மையில் அவரது சகோதரர் குமரேசனும் இதே குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

தாது மண்டல் கடத்தல்
மேலும், சட்ட விரோதமாக கடத்திய மணல் எந்தெந்த நாடுகளுக்கு எந்தெந்த நிறுவனங்களுக்கு சென்றது என்ற விவரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். அரசுக்கு 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ரவுடிகளின் துணையுடன் தாது மணல் கடத்தப்பட்டிருக்கிறது. தாது மணல் கடத்தல் விவரங்களை நீதிமன்றத்திடம் தர தயாராக உள்ளேன் என்றும் குமரேசன் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சசிகலா புஷ்பா
அதேபோல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை வைகுண்டராஜன் இயக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதனை வைகுண்டராஜன் தமது தொலைக்காட்சியான நியூஸ் 7 சேனலுக்கு அளித்த பேடிட்யில் மறுத்திருந்தார்.

நில அபகரிப்பு புகார்
தற்போது வைகுண்டராஜன் மீது நில அபகரிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட எஸ்.பி. விக்ரமனிடம் சுந்தரம் என்பவர் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார்.

போலி கையெழுத்து
அதில், நெல்லை மாவட்டம் நவ்வலடி கிராமத்தில் வி.வி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் உயிரோடு இருக்கும் தாம் இறந்ததாக கூறி போலி கையெழுத்து போட்டு நிலத்தை அபகரித்துவிட்டார் வைகுண்டராஜன் என கூறியுள்ளார். இதேபோல் அடுத்தடுத்து நில அபகரிப்பு புகார்களும் வைகுண்டராஜனுக்கு எதிராக கொடுக்கப்பட உள்ளதாம். இதனால் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
அதில், நெல்லை மாவட்டம் நவ்வலடி கிராமத்தில் வி.வி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் உயிரோடு இருக்கும் தாம் இறந்ததாக கூறி போலி கையெழுத்து போட்டு நிலத்தை அபகரித்துவிட்டார் வைகுண்டராஜன் என கூறியுள்ளார். இதேபோல் அடுத்தடுத்து நில அபகரிப்பு புகார்களும் வைகுண்டராஜனுக்கு எதிராக கொடுக்கப்பட உள்ளதாம். இதனால் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications