3 மாதமாக ஸ்மால் பஸ்களில் இலை உள்ளதே, தற்போது மட்டும் ஏன் மறைக்கணும்?: ஹைகோர்ட்
சென்னை: ஸ்மால் பஸ்களில் உள்ள இலைகள் படத்தை தற்போது மறைக்க மட்டும் ஏன் மறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.
தமிழக அரசு இயக்கும் ஸ்மால் பஸ்களில் இலை படங்கள் உள்ளன. அந்த படங்கள் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை குறிப்பதாக உள்ளது என்றும், அதை மறைக்க வேண்டும் என்றும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அந்த இலை படங்கள் மறைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்மால் பஸ்களில் உள்ள இலை படங்களை தற்போது மட்டும் மறைக்க வேண்டும் என்று கூறுவது ஏன் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தலைமை நீதிபதி கூறுகையில்,
கடந்த 3 மாதங்களாக ஸ்மால் பஸ்கள் இலை படங்களுடன் தானே ஓடுகிறது என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.