நாகர்கோவிலில் மணல் லோடுக்கு லஞ்சம் கேக்குறாங்க... லாரி உரிமையாளர்கள் சங்கம் புகார்!
நாகர்கோவில் அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் மணல் மற்றும் கற்கள் கொண்டு செல்லும் லாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
நாகர்கோவில்: அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
நாகர்கோவிலுள்ள அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் போலீசார் மாமூல் கேட்டு மிரட்டுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளாரிடம் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில் மண்டல பாறாங்கற்கள் மற்றும் மணல் ஏற்றும் டாரஸ் லாரி, மினி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதில் 'நாங்கள் கருங்குளத்தில் உள்ள அரசு அனுமதித்த கல்குவாரியில் இருந்து, மினி லாரிகளில் கற்களை கொண்டு வந்து கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் விநியோகம் செய்து வருகிறோம்.
அப்போது, அஞ்சுகிராமம் சோதனை சாவடியை கடந்து தான் கன்னியாகுமரிக்குள் வர வேண்டும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று, பாஸ் வாங்கி தான் லோடு கொண்டு வருகிறோம். இருப்பினும் அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் இருப்பவர்கள் ஒரு லோடுக்கு ரூ.50 வீதம் கண்டிப்பாக வேண்டும் என கேட்டு மிரட்டுகிறார்கள். அவ்வாறு கொடுக்க மறுக்கும் ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக கூறுகிறார்கள். எனவே தாங்கள் உரிய முறையில் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்' என மனுவில் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications