"சங்கர்-கெளசல்யா நிலைமை எங்களுக்கும் வரக்கூடாது”- திருவள்ளூர் போலீஸில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
சென்னை: திருப்பூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக சங்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி திருவள்ளூரில் மேலும் ஒரு காதல் ஜோடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் காதல் கலப்பு திருமணம் செய்த சங்கர் என்ற பொறியியல் மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கெளசல்யா காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த கொலை சம்பவம் ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வெளியானதில் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையை சேர்ந்த காதல் கலப்பு திருமண ஜோடியான சிவபெருமாள்-காமாட்சி ஆகியோர் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மற்றொரு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
திருவள்ளூர் நேதாஜி சாலையை சேர்ந்த தாரகேசவன் என்பவரது மகள் நந்தினி. இவர் திருவள்ளூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை செய்து வருகிறார்.
பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திக்குக்கும், நந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த 15 ஆம் தேதி நந்தினியை கார்த்திக் காரில் அழைத்துச் சென்றார். நந்தினியை கார்த்திக் கடத்திச் சென்றுவிட்டதாக அவரது தாயார் கீதா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கையும் நந்தினியையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று கார்த்திக்கும், நந்தினியும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஒரு மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இதுகுறித்து நந்தினி, "நாங்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தோம். நாங்கள் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எங்களை பிரிக்க நினைத்தார்கள். இருந்தாலும் காதலை கைவிட மறுத்த நாங்கள் கடந்த 15 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, திருப்பதிக்கு சென்று திருமணம் செய்து கொண்டோம். எனது தாய், தந்தை, மாமா மற்றும் உறவினர்கள் மூலம் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications