கலை உலக தலைமுறைக்கு ஒரு நூலகம் ஆச்சி மனோரமா: வைகோ புகழாஞ்சலி
சென்னை: தமிழ் உலகில் தன் திறமையால் தடம் பதித்த பெண்மணிகளுள் நாம் வாழும் காலத்தில் மிகச் சிறப்பான இடம் பெற்றவர் ஆச்சி மனோரமா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐம்பது ஆண்டு காலமாக நம்மைச் சிரிக்க வைத்த ஆச்சி மனோரமா, இன்று நம்மை அழ வைத்து மறைந்துள்ளார். இதுதான் இயற்கை நியதி என்றாலும்கூட, இதைத் தாங்கிக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. எந்த நொடியிலும், எந்தச் சூழலிலும் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைத்து நம் மனப் புண்களை ஆற்றுவதில் ஆற்றல் மிக்கவர்.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் என்பார் வள்ளுவர். ஆனால், கவலையை மாற்றி சிரிக்க வைக்கும் ஆற்றல் என்பது அந்த ஆற்றலில் எல்லாம் தலையாயது என்று மனோரமா நிருபித்துள்ளார்.
கலையின் மூலம் எவ்வளவு சிறப்பான நிலையை எய்த முடியும் என்பதற்கு ஆச்சி மனோரமா அவர்களின் வாழ்க்கையே சான்றாகும்.
பாட்டி சொல்லைத் தட்டாதே என்று அவர் சொந்தக் குரலில் பாடி நடித்த அந்தப் பதிவுகள் எல்லாம் கலை உலகத் தலைமுறைக்கு ஒரு நூலகமாக என்றைக்கும் விளங்கும்.
தமிழ் உலகில் தன் திறமையால் தடம் பதித்த பெண்மணிகளுள் நாம் வாழும் காலத்தில் மிகச் சிறப்பான இடம் பெற்றவர் ஆச்சி மனோரமா.
தமிழ் ஈழ மக்களின் வேதனையைக் கண்டு தமிழகத்தில் அதற்காக நடைபெற்ற அறப்போர் களங்களில் உணர்வுடன் பங்கேற்றவர் அவர். ஆச்சி மனோரமா மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அவரது குடும்பத்தாருக்கும், கலை உலக ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications