சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்
சென்னை காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை: சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவை தோற்றுவித்தவருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு தமிழக அரசால் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அதிமுக அரசு மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குதல், பொதுக்கூட்டங்களை நடத்துதல் போன்ற நிகழ்வுகளின் மூலம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவாக சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு சுமார் 66 அடி அகலமும், 55 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த வளைவு அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைபாடுகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications