விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை நீக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஜெயக்குமார் அதிரடி
விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரனை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குட்கா விவகாரத்தில் சிக்கிய டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனரான ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

11 மணி நேரம் ரெய்டு
இதையடுத்து இவர்களுடைய வீடு உள்ளிட்ட 40 இடங்களில் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் மட்டும் 11 மணி நேரம் ரெய்டு நடந்து முடிந்துள்ளது.

கோரிக்கை வலுக்கிறது
தமிழக அரசியலில் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது. பெரும்பாலான கட்சி தலைவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது இவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீதிமன்றம்தான் சொல்லும்
இதனிடையே, சிபிஐ சோதனை குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு, "இந்த விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்.

அனைவரும் நிரபராதிதான்
நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வரை அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி தீர்ப்பு வரும் வரை சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications