செய்தி சேனல்களில் மோடிக்கு அதிக முக்கியத்துவம்: ஆய்வில் தகவல்
சென்னை: செய்தி ஊடகங்களில் நரேந்திரமோடிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் செய்தி ஊடகங்கள் எந்த மாதிரியான செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன என்பது குறித்து சிஎம்எஸ் மீடியா லேப் என்ற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. அந்த

ஆய்வில், பிரைம் டைம் என்று கூறப்படும், இரவு 8 மணி முதல் 9.30 மணி வரையிலான காலகட்டத்தில், எந்த கட்சிக்கு அல்லது எந்த தலைவருக்கு செய்தி ஊடகங்கள் அதிக கவரேஜ்
கொடுத்துள்ளன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நரேந்திரமோடியின் செய்திகளை ஒளிபரப்பவே செலவிட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. மொத்த நேரத்தில்
10 சதவீதம் ஆம் ஆத்மியின், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்திக்கு 4.5 சதவீத நேரமே ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் விரும்புவார்கள்
என்பதற்காக இவ்வாறு மோடிக்கு அதிகமாகவும், ராகுலுக்கு குறைவாகவும் நேரம் ஒதுக்கப்பட்டதாக தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியில்லாமல், மீடியாக்கள் ஒரு
சார்பு நிலையை எடுத்து செய்தி ஒளிபரப்பியதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. இதுபோல பத்திரிகைகளிலும் பெரும்பாலான செய்திகள் மோடியை சார்ந்தே
வெளியாகியுள்ளன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications