மைசூரு, குலசை நகரங்களில் கோலாகலமாக தொடங்கியது தசரா! 10ம் தேதி சூரசம்ஹாரம் #Navratri
சென்னை: உலக புகழ்பெற்றது மைசூரு தசரா ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி முன்னிட்டு நடக்கும். 10 நாட்கள் நடக்கும் இந்த தசரா விழா இன்று காலை 11.40 மணிக்கு மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜையுடன் கோலாகமாக தொடங்கியது.
தசராவை பிரபல எழுத்தாளரும், நாடோஜா விருது பெற்றவருமான சென்னவீர கனவி தொடங்கி வைத்தார். முதல்வர் சித்தராமையா சிறப்புரையாற்றினார்.

காவிரி பிரச்சினை, போராட்டங்களுக்கு நடுவே, தசரா விழா தொடங்கி உள்ளதால் பழைய பொலிவுடன் தசரா நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆனாலும் வழக்கம் போல இந்த ஆண்டும் தசரா விழாவை காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவித்து வருகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
இதேபோல தமிழகத்தின் மைசூரு என புகழப்படும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.
ராக்கெட் ஏவுவதற்கு, பிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான நிலப்பகுதி குலசேகரன்பட்டினம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளது இந்த நகரத்துக்கு கிடைத்துள்ள கூடுதல் சிறப்பு. இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் கோரிக்கை நிறைவேறினால், இந்த நகரம் மிகுந்த வளர்ச்சியடையும். அப்போது மைசூருக்கு ஈடாக தசரா விழா உலக பிரசித்து பெற வாய்ப்பும் கிடைக்கும்.
தசராவை முன்னிட்டு இன்று அக்டோபர் 1ம் தேதி, அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா நடந்தது. காலை 8 மணிக்கு கோயிலில் தசரா கொடியேற்றம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவங்குவர். இதையொட்டி காலை 6 மணி, மதியம் 1 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.
இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதியுலா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அபிஷேக, அலங்கார தீபாராதனையும் மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவும், இரவு பரதநாட்டியமும், பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் திடலுக்கு எழுந்தருளி சூரனை வதம் செய்யும் மகிசா சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தபடி கோயிலுக்கு வருகை தருவது சிறப்பு.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications