ஆரம்பமே அமர்க்களம்.. இந்தாண்டின் முதல் மழை லீவு... அதுவும் 2 நாட்கள்... மாணவர்கள் ஹேப்பி!
நாடா புயலால் தமிழக பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: நாடா புயலால் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் என இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென் கிழக்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே சில நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது புயலாக மாறியுள்ளது. அதற்கு 'நாடா' புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் நாளை மறுநாள் கடலூர் அருகே கரையைக் கடக்க உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இம்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிகளுக்கு விடுமுறை..
அதன் ஒருகட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் மற்றும் மரக்காணம் ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மொத்தம் 4 நாட்கள்...
மழை காரணமாக நடப்பாண்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த விடுமுறையானது வியாழன், வெள்ளி என வார இறுதி நாட்களோடு சேர்ந்து வருவதால், சனி, ஞாயிறுடன் சேர்த்து மொத்தம் நான்கு நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

கடந்தாண்டு நிலவரம்...
கடந்தாண்டு வெள்ளத்தின் போது, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் அதிகமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்த ரமணனை கடவுள் ரேஞ்சுக்கு மாணவர்கள் கொண்டாடினார்கள்.

மனக்குறை...
ஆனால், அவர் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றுவிட, அவரைத் தொடர்ந்து பதவியேற்ற பாலச்சந்திரன் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லையே என்ற மனக்குறை அவர்களிடம் இருந்தது.

மாணவர்கள் ஹேப்பி...
இந்த சூழ்நிலையில் தான், நாளையும், நாளை மறுநாளும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. அதுவும் இரண்டு நாட்கள். இதனால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications