காவிரியில் கலக்கும் கழிவு நீர்.... கர்நாடகாவுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்!!
சென்னை: காவிரி ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீர் குறித்து விளக்கமளிக்குமாறு கர்நாடக அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்மையில் கர்நாடக மேலவையில் பேசிய அந்த மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவராஜ், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில், தினமும் குடிநீர்க் குழாய்கள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாக மொத்தம் 1,950 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

இதில் 148 கோடி லிட்டர் கழிவு நீராக, ஆறுகள் மற்றும் கால்வாய்கள் வழியாக பல்வேறு வகைகளிலும் தமிழகத்திற்குள் செல்கிறது; 88.9 கோடி லிட்டர் கழிவு நீர் பினாகினி மற்றும் தென்பெண்ணை ஆறுகளின் வழியாகவும், 59.3 கோடி லிட்டர் கழிவு நீர் அர்காவதி மற்றும் காவிரி ஆறுகளிலும் கலந்து தமிழகத்திற்குச் செல்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
கர்நாடக அமைச்சர் ஒருவரே காவிரியில் கழிவு நீர் கலக்கப்பப்படுவதை உறுதி செய்ததையடுத்து, தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கர்நாடகாவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். கர்நாடகம், பூகோள ரீதியாக மேடான பகுதி என்பதால், அங்கிருந்து கழிவு நீர் நேரடியாக, தமிழகத்தில் காவிரியில் கலக்கும் சூழல் உள்ளது. நதியாக இருந்த காவிரி வடிகால்வாயாக மாற, கர்நாடகமே காரணம் என்றும் கருணாநிதி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் காவிரியில் கலக்கும் கழிவு நீரை தடுத்து நிறுத்தக் கோரி கர்நாடகாவுக்கு எதிராக பொதுநல மனுவை சுதன் என்பவர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், காவிரியில் கழிவுநீர் கலப்பது குறித்து வரும் ஜூலை 280-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications